காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்கின்றனர். அதில் "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்பன் நேற்று - இன்று- நாளை என்ற மூன்று பிரிவுகளில் இக் கருத்தரங்கம் நடைபெறும்.
பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் பி.எச்.டி, எம்.பில். மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசிக்கலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்கத்தின்போது, "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் பெற: கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் பணி மண்டபம், காரைக்குடி. மின்னஞ்சல்: [email protected] அலைபேசி: 9445022137 இந்தப் பதிவுக்கான கடைசித் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி.
ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு ஆசிரியர்களுக்கு ரூ.500-ம் மாணவர்களுக்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் 2 நாள்களுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் ஆய்வுக் கோவை நூலும் இலவசமாக அளிக்கப்படும்.
பரிசு: ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2012 வரையுள்ள காலங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள கம்பன், கம்பராமாயணம் பற்றிய சிறந்த ஆய்வு நூலை எழுதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000, பதிப்பாளர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிக்கப்படும்.
காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்கின்றனர். அதில் "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்பன் நேற்று - இன்று- நாளை என்ற மூன்று பிரிவுகளில் இக் கருத்தரங்கம் நடைபெறும்.
பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் பி.எச்.டி, எம்.பில். மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசிக்கலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்கத்தின்போது, "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' என்ற பெயரில் நூலாக வெளியிடப்படும்.
மேலும் விவரங்கள் பெற: கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் பணி மண்டபம், காரைக்குடி. மின்னஞ்சல்: [email protected] அலைபேசி: 9445022137 இந்தப் பதிவுக்கான கடைசித் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி.
ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு ஆசிரியர்களுக்கு ரூ.500-ம் மாணவர்களுக்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் 2 நாள்களுக்கு தங்கும் வசதி, உணவு மற்றும் ஆய்வுக் கோவை நூலும் இலவசமாக அளிக்கப்படும்.
பரிசு: ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2012 வரையுள்ள காலங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள கம்பன், கம்பராமாயணம் பற்றிய சிறந்த ஆய்வு நூலை எழுதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000, பதிப்பாளர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிக்கப்படும்.